சவால்கள்

கதறி அழுகிற சவால

30 நாட்கள் கதறி அழுகின்ற சவாலுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். இந்த ஜெப சவால் உங்களுக்கு கொடுக்கப்படும் இன்னொரு வேலை அல்ல; இது ஒரு அறைகூவல். நம் உலகில் நம்மை சுற்றி நடப்பதை கவனிக்கவும், அந்த பாரத்தை இருதயத்தில் சுமக்கவும், 30 நாட்களை ஒருமனப்பட்ட, தீவிரமாக கதறி அழுது ஜெபிப்பதற்கு ஒதுக்கவும் கிறிஸ்துவின் திருச்சபையை அழைக்கும் ஒரு ஆன்மீக அழைப்பு இது. கண்களைத் திறந்து, இருதயங்களைத் தாழ்த்தி, தேவனை ஆழமாகத் தேடும் இந்த பயணத்தில் ஒன்றாக இணைந்து இந்த சவாலை சந்திப்போமா?

சவாலை ஆரம்பிப்போம்

30-நாள் கணவரை ஊக்குவிக்கும் சவால்

கணவரை ஊக்குவிக்கும் சவால் மூலம் உங்கள் கணவரைப் பற்றிய உங்களுடைய செயல்கள், பேச்சுகள், எண்ணங்கள் எப்படி இருக்கின்றன என்பதை நேர்மையாகப் பார்க்க தேவன் நம்மை அழைக்கிறார். இந்த சவால் கணவரை மாற்றுவதற்காக அல்ல; முதலில் நம் பார்வையும் இதயமும் மாறுவதற்காக. அந்த மாற்றத்தின் வழியாக தேவன் நம் திருமண வாழ்க்கையை அமைதியாகவும் அழகாகவும் மாற்றி, அது பிறருக்கும் வெளிச்சம்தரும் வாழ்வாக மாற்றுவார் . நம்மை ஒரு குணசாலியான ஸ்திரியாக மாற்ற இந்த 30 நாட்களை நாம் பயன்படுத்துவோமா?

சவாலை ஆரம்பிப்போம்